புது தில்லி:
வரும் 2016-2017ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
அவரது பட்ஜெட், பயணிகள் நலனை மையமாகக் கொண்டது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தாகத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மோடி.
அதில்,
A passenger centric #RailBudget2016 without any fare hike. यात्री की गरिमा, रेल की गति और राष्ट्र की प्रगति। @RailMinIndia
— Narendra Modi (@narendramodi) February 25, 2016
இந்த ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், “ரயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் வசதிக்காக பால் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்” என்றும் “பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெண்களுக்கு லோயர்பெர்த் வழங்குவதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இதற்காக 65,000 கூடுதல் படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிலேயே முதன் முறையாக, ரயிலில் கார்களை கொண்டு செல்லும் முனையம் சென்னையில் ஏற்படுத்தப்படும் ரயில்வே துறையில், பயணிகளின் கருத்துக்கள் கேட்டு, அதன்படி திட்டங்கள் வகுக்கப்படும் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


