இஷ்ரத் ஜஹான், அப்சல் குரு குறித்த ப.சிதம்பரம், ஜி.கே. பிள்ளையின் மாறுபட்ட கருத்துகள்: அவையில் அமளி

புது தில்லி:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த பேட்டி, குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் குறித்து முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும் தெரிவித்த கருத்து ஆகியவை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த 2001-ல் நாடாளுமன்ற தாக்குதல் சதியில் அப்சல் குருவுக்கு பங்கு இருந்ததா என்ற பலத்த சந்தேகம் உள்ளது” என்றார்.

இதுபோல் முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அளித்த பேட்டியில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் காங்கிரஸ் கட்சி தலையிட்டது. இவ்வழக்கில் 2 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2-வது பிரமாண பத்திரத்தில் முரண்பாடுகள் இருந்தது. இதற்கு அரசியல் தலையீடே காரணம்” என்றார்.

மேற்கண்ட இந்த இருவரின் கருத்துகளால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக உறுப்பினர் அனுராக் தாக்கூர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

“குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை அரசியல் ரீதியாக பழி தீர்க்கவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயன்றுள்ளது. இஷ்ரத் ஜஹான் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை திருத்தியது யார் என்பதை நாடு அறிந்துகொள்ள விரும்புகிறது” என்றார்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் குறித்து அனுராக் தாக்கூர் தெரிவித்த அவதூறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா கூறிய கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்றார். அவருக்கு தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி எழுந்து, “அனுராக் தாக்கூர் பெயரை குறிப்பிட்டு கார்கே தனது கருத்தை தெரிவிக்க தடையில்லை என்றால், அனுராக் தாக்கூருக்கும் அவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

அனுராக் தாக்கூர் எழுந்து, ப.சிதம்பரம், ஜி.கே.பிள்ளை கருத்து தொடர்பாக பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பாஜக உறுப்பினர்கள், “இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதி கேட்டு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories