சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 700 அரசு அலுவலர் குடியிருப்புக்களையும் முதல்வர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
258.88 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
அரியலூர்-மேலராமநல்லூரில் உயர்மட்ட பாலம், 9 தடுப்பணைகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை அலுவலகக் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்மா கைப்பேசி திட்டத்தையும் அவர் துவங்கி வைத்தார். கோவை மாநகர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு புறநகருக்கு அதிமுக பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கான சாவிகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


