திருப்பதி கோவிலில் புதிய அக்‌ஷயபாத்திரம்

Published:

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 1985ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கு பணி தொடரப்பட்டது.

ஒரு நாளைக்கு 2000 பக்தர்களுக்கு அன்னபிரசாதம் தயார்செய்யப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 1.25 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடக்கும் பிரமோற்சவம் போன்ற முக்கிய நிகழ்ச்சியின் போது பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் அன்னபிரசாதம் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, கூடுதலாக 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் தயார் செய்யும் வகையில் அக்‌ஷயபாத்திரம் என்ற பெயரில் அன்னக்கூடம் கட்டடப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img