December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

மரபுகளை மாற்றுதல் மிகத் தவறு!

thiruvalluvar deivapulavar - 2025

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே  #திருவள்ளுவர்  உருவம் முனிவரைப் போல ஜடாமுடி தரித்து, திருநீறு அணிந்து, பூணூல் அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் தான் காணப்பட்டது. அதில் எந்தவிதப் பிரச்சனையும் இருந்ததில்லை.

பின்னால் அரசாங்கம் அவரது அங்கீகரிக்கப்பட்ட படத்தை வெளியிடும் பொழுது, உள்ளே ஏதும் இருக்கின்றதா இல்லையா என்று எவரும் சந்தேகிக்கும் வண்ணம், “உண்டென்றால் உண்டு – இல்லையென்றால் இல்லை” என்பது போல வள்ளுவருக்குத் தோளிலே ஒரு பெரிய துண்டு போர்த்திய படம் ஒன்று வந்தது. அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை.

குமரிமுனையில் கலைஞர் அவர்களது முயற்சியினால் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன். அப்போது முதல் அநேகமாகத் திருவள்ளுவரை நின்ற தோற்றத்தில் கம்பீரமாகத் தான் வெளியிட்டார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை.

இன்று யாரோ ஒருவர் இதுபோன்ற தோற்றத்தில் வள்ளுவரது படத்தை வெளியிட்டார் என்பதற்காக அதை விமர்சிப்பதும், பிரச்சனை ஆக்குவதும் விரும்பத் தக்கதல்ல.

எனக்கென்ன வயிற்றெரிச்சல் என்றால், நான் வணங்கும் பாரதியை, எப்பொழுதும் நெற்றியிலே குங்குமத்தோடு காட்சியளிக்கும் பராசக்தியின் பக்தனை, அரசாங்கம் குங்குமம் இல்லாமல் தான் ஓவியமாக்கி வெளியிட்டது. நான் எந்த பாரதி விழாவில் கலந்து கொண்டாலும், ஒவ்வொரு முறையும் நான் எனது கையினால் பாரதிக்குக் குங்குமத் திலகமிட்டுத் தான் அவரை வணங்கி வருவேன்.

ஆகவே, இது அவரவரது எண்ணத்தின் பிரதிபலிப்பு. இதைப் பெரிதாக்குவது பொருத்தமல்ல.

திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. ஆனால் அந்தப் பொதுமறைக்கு நாங்கள் தான் சொந்தமெனக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறது. குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு அந்த உரிமை அதிகம் இருக்கிறது.

  • இல. கணேசன் (மாநிலங்களவை உறுப்பினர், பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories