February 9, 2025, 2:40 PM
29.8 C
Chennai

தெலங்கானா தாசில்தார் எரித்துக் கொலை! வருவாய்த்துறையினர் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்!

தெலங்கானாவில் அதிர்ச்சி ஊட்டும் விதமாக, பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் விஜயா ரெட்டி கொலை மீது நாளை மாநில அளவில் பந்த் நடத்த தீர்மானித்துள்ளனர். வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் செய்ய உள்ளன. நாளை மாநில அளவில் பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்துள்ளனர்.

அதேநேரம் விஜயாவின் இறுதி ஊர்வலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். விஜயா ரெட்டி சிறந்த அதிகாரி என்று தெலங்காணா பணியாளர்கள் ஜெஏசி ‘காரம்’ ரவிந்த்ர ரெட்டி மற்றும் பொதுச் செயலர் மமதா ஆகியோர் குறிப்பிட்டனர்

பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.

உஸ்மானியா மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து பணிகளிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஹைதராபாத்துக்கு திரண்டு வர வேண்டும் என்று துணை ஆட்சியர்கள் அசோசியேஷன் தலைவர் வி லச்சிரெட்டி, மற்றும் தாசில்தார் அசோசியேஷன் தலைவர் எஸ். ராமுலு ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உயிரிழந்த விஜயா ரெட்டிக்கு 10 வயதில் பெண்ணும் ஐந்து வயதில் மகனுமாக இரு சிறு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த விஜயா அதனை ராஜினாமா செய்துவிட்டு கிரேட் 2 தேர்வு எழுதி எம்ஆர்ஓ.,வாக சேர்ந்ததாக அவர் தந்தை லிங்காரெட்டி தெரிவித்தார்.

விஜயா நேர்மையான அதிகாரியாக விதி முறைகளோடு பணியாற்றியவர் என்று அலுவலக சக பணியாளர்கள் குறிப்பிட்டனர். மாநில அளவில் வருவாய்த்துறை பணியாளர்கள் வேலையை நிறுத்தி தாங்கள் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி, தரையில் அமர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே தாய் இறந்த செய்தி கேட்டு, குழந்தைகள் தாயின் மறைவுக்குக் கதறும் காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

Topics

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories