தெலங்கானா தாசில்தார் எரித்துக் கொலை! வருவாய்த்துறையினர் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்!

Published:

tahsildar muder telangana - 2026

தெலங்கானாவில் அதிர்ச்சி ஊட்டும் விதமாக, பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் விஜயா ரெட்டி கொலை மீது நாளை மாநில அளவில் பந்த் நடத்த தீர்மானித்துள்ளனர். வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் செய்ய உள்ளன. நாளை மாநில அளவில் பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்துள்ளனர்.

அதேநேரம் விஜயாவின் இறுதி ஊர்வலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். விஜயா ரெட்டி சிறந்த அதிகாரி என்று தெலங்காணா பணியாளர்கள் ஜெஏசி ‘காரம்’ ரவிந்த்ர ரெட்டி மற்றும் பொதுச் செயலர் மமதா ஆகியோர் குறிப்பிட்டனர்

பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.

உஸ்மானியா மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து பணிகளிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஹைதராபாத்துக்கு திரண்டு வர வேண்டும் என்று துணை ஆட்சியர்கள் அசோசியேஷன் தலைவர் வி லச்சிரெட்டி, மற்றும் தாசில்தார் அசோசியேஷன் தலைவர் எஸ். ராமுலு ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
tahsildar telangana - 2026

உயிரிழந்த விஜயா ரெட்டிக்கு 10 வயதில் பெண்ணும் ஐந்து வயதில் மகனுமாக இரு சிறு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த விஜயா அதனை ராஜினாமா செய்துவிட்டு கிரேட் 2 தேர்வு எழுதி எம்ஆர்ஓ.,வாக சேர்ந்ததாக அவர் தந்தை லிங்காரெட்டி தெரிவித்தார்.

விஜயா நேர்மையான அதிகாரியாக விதி முறைகளோடு பணியாற்றியவர் என்று அலுவலக சக பணியாளர்கள் குறிப்பிட்டனர். மாநில அளவில் வருவாய்த்துறை பணியாளர்கள் வேலையை நிறுத்தி தாங்கள் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி, தரையில் அமர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர்.

vijaya 2 - 2026

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே தாய் இறந்த செய்தி கேட்டு, குழந்தைகள் தாயின் மறைவுக்குக் கதறும் காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img