December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

தெலங்கானா தாசில்தார் எரித்துக் கொலை! வருவாய்த்துறையினர் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்!

tahsildar muder telangana - 2025

தெலங்கானாவில் அதிர்ச்சி ஊட்டும் விதமாக, பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் விஜயா ரெட்டி கொலை மீது நாளை மாநில அளவில் பந்த் நடத்த தீர்மானித்துள்ளனர். வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் செய்ய உள்ளன. நாளை மாநில அளவில் பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்துள்ளனர்.

அதேநேரம் விஜயாவின் இறுதி ஊர்வலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். விஜயா ரெட்டி சிறந்த அதிகாரி என்று தெலங்காணா பணியாளர்கள் ஜெஏசி ‘காரம்’ ரவிந்த்ர ரெட்டி மற்றும் பொதுச் செயலர் மமதா ஆகியோர் குறிப்பிட்டனர்

பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.

உஸ்மானியா மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து பணிகளிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஹைதராபாத்துக்கு திரண்டு வர வேண்டும் என்று துணை ஆட்சியர்கள் அசோசியேஷன் தலைவர் வி லச்சிரெட்டி, மற்றும் தாசில்தார் அசோசியேஷன் தலைவர் எஸ். ராமுலு ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

tahsildar telangana - 2025

உயிரிழந்த விஜயா ரெட்டிக்கு 10 வயதில் பெண்ணும் ஐந்து வயதில் மகனுமாக இரு சிறு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த விஜயா அதனை ராஜினாமா செய்துவிட்டு கிரேட் 2 தேர்வு எழுதி எம்ஆர்ஓ.,வாக சேர்ந்ததாக அவர் தந்தை லிங்காரெட்டி தெரிவித்தார்.

விஜயா நேர்மையான அதிகாரியாக விதி முறைகளோடு பணியாற்றியவர் என்று அலுவலக சக பணியாளர்கள் குறிப்பிட்டனர். மாநில அளவில் வருவாய்த்துறை பணியாளர்கள் வேலையை நிறுத்தி தாங்கள் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி, தரையில் அமர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர்.

vijaya 2 - 2025

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே தாய் இறந்த செய்தி கேட்டு, குழந்தைகள் தாயின் மறைவுக்குக் கதறும் காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories