திருப்பள்ளி எழுச்சி-7: அந்தரத் தமரர்கள் (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி பாசுரம்- 7

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

அந்தரத்(து) அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே (7)

பொருள்

தேவலோகத்தில் இருந்து தேவர்கள் அனைவரும் தங்களது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தனர். இந்திரனும் தனது பட்டத்து யானையுடன் வந்து சேர்ந்தான். ரிஷிகளும் உனது திருக்கோயிலின் வாசலில் வந்து கூடினர். பக்திக் களிப்பில் மயங்கிய மருத் கணங்களும் யக்ஷர்களும் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் ஒருவரை ஒருவர் முந்தியபடி உன் திருவடி தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் பூமியையும் ஆகாசத்தையும் வியாபித்து நிற்கிறது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

இந்திரன் தானும் ஆனையும் – இந்திரனும் அவனது யானையும் (தனது பட்டத்து யானையாகிய ஐராவதத்தின்மீது ஏறி இந்திரன் வந்து சேர்ந்தான்.)

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

அரும் தவ முனிவர் – ரிஷிகள்

சுந்தரர் – கந்தர்வர்கள்

விச்சாதரர் – வித்யாதரர்கள்

இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)

நெருக்க, நூக்க – முண்டியடிப்பது

மயங்கினர் – பக்திக் களிப்பில் சுயநினைவை இழந்தனர்

அந்தரம் – ஆகாயம்

பார் – பூமி

கந்தர்வர்கள் தேவலோகப் பாடகர்கள். யக்ஷர்கள் தேவலோகத்தின் பொக்கிஷ அறையைப் பாதுகாப்பவர்கள். (குபேரனும் ஒரு யக்ஷன்தான்.) மருத் கணங்கள் ஒன்பது பேர். இவர்கள் வாயுவுக்குத் துணைபுரிபவர்கள்.

ஆன்மிகம், தத்துவம்

ரிஷி முனிவர்கள் என்ற இரண்டு பதங்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், உண்மையில், ரிஷி என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே துறவற தர்மத்தைக் குறைவின்றிக் கடைப்பிடித்து வரும் மேலோரைக் குறிப்பது. முனி என்பது திருமணத் தொடர்பு இல்லாத சன்னியாசியைக் குறிப்பது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories