December 5, 2025, 8:30 PM
26.7 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி-7: அந்தரத் தமரர்கள் (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி பாசுரம்- 7

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

அந்தரத்(து) அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே (7)

பொருள்

தேவலோகத்தில் இருந்து தேவர்கள் அனைவரும் தங்களது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தனர். இந்திரனும் தனது பட்டத்து யானையுடன் வந்து சேர்ந்தான். ரிஷிகளும் உனது திருக்கோயிலின் வாசலில் வந்து கூடினர். பக்திக் களிப்பில் மயங்கிய மருத் கணங்களும் யக்ஷர்களும் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் ஒருவரை ஒருவர் முந்தியபடி உன் திருவடி தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் பூமியையும் ஆகாசத்தையும் வியாபித்து நிற்கிறது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

இந்திரன் தானும் ஆனையும் – இந்திரனும் அவனது யானையும் (தனது பட்டத்து யானையாகிய ஐராவதத்தின்மீது ஏறி இந்திரன் வந்து சேர்ந்தான்.)

அரும் தவ முனிவர் – ரிஷிகள்

சுந்தரர் – கந்தர்வர்கள்

விச்சாதரர் – வித்யாதரர்கள்

இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)

நெருக்க, நூக்க – முண்டியடிப்பது

மயங்கினர் – பக்திக் களிப்பில் சுயநினைவை இழந்தனர்

அந்தரம் – ஆகாயம்

பார் – பூமி

கந்தர்வர்கள் தேவலோகப் பாடகர்கள். யக்ஷர்கள் தேவலோகத்தின் பொக்கிஷ அறையைப் பாதுகாப்பவர்கள். (குபேரனும் ஒரு யக்ஷன்தான்.) மருத் கணங்கள் ஒன்பது பேர். இவர்கள் வாயுவுக்குத் துணைபுரிபவர்கள்.

ஆன்மிகம், தத்துவம்

ரிஷி முனிவர்கள் என்ற இரண்டு பதங்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், உண்மையில், ரிஷி என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே துறவற தர்மத்தைக் குறைவின்றிக் கடைப்பிடித்து வரும் மேலோரைக் குறிப்பது. முனி என்பது திருமணத் தொடர்பு இல்லாத சன்னியாசியைக் குறிப்பது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories