February 22, 2026, 6:36 AM
25.4 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி-7: அந்தரத் தமரர்கள் (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி பாசுரம்- 7

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

அந்தரத்(து) அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே (7)

பொருள்

தேவலோகத்தில் இருந்து தேவர்கள் அனைவரும் தங்களது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தனர். இந்திரனும் தனது பட்டத்து யானையுடன் வந்து சேர்ந்தான். ரிஷிகளும் உனது திருக்கோயிலின் வாசலில் வந்து கூடினர். பக்திக் களிப்பில் மயங்கிய மருத் கணங்களும் யக்ஷர்களும் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் ஒருவரை ஒருவர் முந்தியபடி உன் திருவடி தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் பூமியையும் ஆகாசத்தையும் வியாபித்து நிற்கிறது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

இந்திரன் தானும் ஆனையும் – இந்திரனும் அவனது யானையும் (தனது பட்டத்து யானையாகிய ஐராவதத்தின்மீது ஏறி இந்திரன் வந்து சேர்ந்தான்.)

அரும் தவ முனிவர் – ரிஷிகள்

சுந்தரர் – கந்தர்வர்கள்

விச்சாதரர் – வித்யாதரர்கள்

இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)

நெருக்க, நூக்க – முண்டியடிப்பது

மயங்கினர் – பக்திக் களிப்பில் சுயநினைவை இழந்தனர்

அந்தரம் – ஆகாயம்

பார் – பூமி

கந்தர்வர்கள் தேவலோகப் பாடகர்கள். யக்ஷர்கள் தேவலோகத்தின் பொக்கிஷ அறையைப் பாதுகாப்பவர்கள். (குபேரனும் ஒரு யக்ஷன்தான்.) மருத் கணங்கள் ஒன்பது பேர். இவர்கள் வாயுவுக்குத் துணைபுரிபவர்கள்.

ஆன்மிகம், தத்துவம்

ரிஷி முனிவர்கள் என்ற இரண்டு பதங்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், உண்மையில், ரிஷி என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே துறவற தர்மத்தைக் குறைவின்றிக் கடைப்பிடித்து வரும் மேலோரைக் குறிப்பது. முனி என்பது திருமணத் தொடர்பு இல்லாத சன்னியாசியைக் குறிப்பது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories