ஆரோக்கிய சமையல்: சாமை வெந்தய தேங்காய் பால் கஞ்சி!

samai venthaya coconut milk kantchi
samai venthaya coconut milk kantchi

சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையான பொருட்கள்:
சாமை – 100 கிராம்,
பாசிப்பருப்பு – 25 கிராம்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
தேங்காய் – ஒரு மூடி (சிறியது),
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 7 பல்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
பட்டை – 2 சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) – தலா 2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சாமை, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு, பூண்டு இரண்டையும் ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயையும் வட்டமாக நறுக்கிவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டு பட்டையைத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் பூண்டு, சோம்பு சேர்த்துப் புரட்டவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். கொத்தமல்லியும் புதினாவும் லேசாக வதங்க ஆரம்பிக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

இதனுடன் ஒரு பங்கு சாமைக்கு ஆறு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை ஊற்றவும். கூடவே தேவையான அளவு உப்பையும் இதில் சேர்க்கவும். பிறகு இதனுடன் களைந்து வைத்த அரிசி – பருப்புக் கலவையையும் சேர்த்துக் கலக்கி பத்து விசில் வரும்வரை குக்கரில் வேகவைக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியபின் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி மேலாக சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவினால், சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி மிகவும் கெட்டியாகத் தெரிந்தால் தேவைக்கேற்ப வெந்நீர் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் கஞ்சியில் மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories