April 27, 2025, 2:35 AM
29.6 C
Chennai

திருப்புகழ் கதைகள்: அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 194
குழல்கள் சரிய – பழநி
அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு – 2

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இத்தகைய வார்த்தை விளையாட்டு வரும் பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கண்காட்சி திரைப்படத்தில் வருகின்ற

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா – மண்ணுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா.

என்ற பாடலையும், நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெறும்

ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

என்ற பாடலையும் சொல்லலாம்.

காளமேகப் புலவர் இத்தகைய பல பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை வித்தாரக் கவி வகையில் சேர்ந்தவை. எடுத்துக்காட்டாக,

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

காக்கைக்கா காகூகை,
கூகைக்காகா காக்கை,
கோக்குக்கூக்  காக்கைக்குக்
கொக்கொக்க, கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா!

காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை), கூகைக்கு ஆகா காக்கை, கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கொக்கு ஒக்க (கொக்கைப் போல), கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு), காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்) முடியாது. மேலே சொன்னதைப் போல அருணகிரியார் இத்திருப்புகழில் சில வரிகளை இடம் பெறச் செய்திருக்கிறார்.

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி

     விபின கெமனி ……         யருள்பாலா

பழைய மறையின் முடிவி லகர மகர உகர

     படிவ வடிவ ……       முடையோனே

பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ

     பழநி மருவு ……       பெருமாளே.

என்ற வரிகள்தான் அவை. விமலி என்றால் குற்றம் இல்லாதவர்; அமலி என்றால் குற்றங்களை அகற்றுபவர்; நிமலி என்றால் பரிசுத்தமானவர்; குமரி என்றால் இளமையானவ்ர்; கவுரி என்றால் பொன்னிறம் படைத்தர்; தருணி என்றால் நல்ல பருவமுடையவர்; விபின கெமினி என்றால் மயானத்தில் ஆடுபவர்; இந்தச் சொற்களின் மூலம் அருணகிரியார் உமாதேவியாரைக் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த நிதிகள்: பாம்பன் பாலத் திறப்பு விழாவில் புட்டுப்புட்டு வைத்த மோடி!

அடுத்த வரியில் பழைமையான வேதமுடிவில், அகர மகர உகர படிவ வடிவம் உடையோனே என்று முருகனைப் புகழ்கிறார். அதாவது அகர உகர மகரங்களைக் கொண்ட பிரணவத்தை உருவத் திருமேனியாகக் கொண்டவரே எங்கிறார். பின்னர் பழனியைச் சிறப்பிக்க, நன்செய் புன்செய்களும், பாக்கு மரங்களும், வாழைகளும், பலா மரங்களும் அசைந்து விளங்கும் பழனி எனக் குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories