திருப்புகழ் கதைகள்: அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 194
குழல்கள் சரிய – பழநி
அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு – 2

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இத்தகைய வார்த்தை விளையாட்டு வரும் பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கண்காட்சி திரைப்படத்தில் வருகின்ற

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா – மண்ணுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா.

என்ற பாடலையும், நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெறும்

ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

என்ற பாடலையும் சொல்லலாம்.

காளமேகப் புலவர் இத்தகைய பல பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை வித்தாரக் கவி வகையில் சேர்ந்தவை. எடுத்துக்காட்டாக,

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

காக்கைக்கா காகூகை,
கூகைக்காகா காக்கை,
கோக்குக்கூக்  காக்கைக்குக்
கொக்கொக்க, கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா!

காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை), கூகைக்கு ஆகா காக்கை, கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கொக்கு ஒக்க (கொக்கைப் போல), கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு), காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்) முடியாது. மேலே சொன்னதைப் போல அருணகிரியார் இத்திருப்புகழில் சில வரிகளை இடம் பெறச் செய்திருக்கிறார்.

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி

     விபின கெமனி ……         யருள்பாலா

பழைய மறையின் முடிவி லகர மகர உகர

     படிவ வடிவ ……       முடையோனே

பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ

     பழநி மருவு ……       பெருமாளே.

என்ற வரிகள்தான் அவை. விமலி என்றால் குற்றம் இல்லாதவர்; அமலி என்றால் குற்றங்களை அகற்றுபவர்; நிமலி என்றால் பரிசுத்தமானவர்; குமரி என்றால் இளமையானவ்ர்; கவுரி என்றால் பொன்னிறம் படைத்தர்; தருணி என்றால் நல்ல பருவமுடையவர்; விபின கெமினி என்றால் மயானத்தில் ஆடுபவர்; இந்தச் சொற்களின் மூலம் அருணகிரியார் உமாதேவியாரைக் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அடுத்த வரியில் பழைமையான வேதமுடிவில், அகர மகர உகர படிவ வடிவம் உடையோனே என்று முருகனைப் புகழ்கிறார். அதாவது அகர உகர மகரங்களைக் கொண்ட பிரணவத்தை உருவத் திருமேனியாகக் கொண்டவரே எங்கிறார். பின்னர் பழனியைச் சிறப்பிக்க, நன்செய் புன்செய்களும், பாக்கு மரங்களும், வாழைகளும், பலா மரங்களும் அசைந்து விளங்கும் பழனி எனக் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories