
சோயா புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்,
சோயா உருண்டைகள் – அரை கப்,
நறுக்கிய வெங்காயம் – கால் கப்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
தயிர் – அரை கப்,
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் ‘சிம்’மில் வைத்து இறக்கவும்.