அஸ்தி ஜூரம் நீங்க…
சுக்கு, கடுகு, ரோகிணி, விஷ்ணு கிரந்தி இலை, பர்ப்படாகம். வகைக்கு 25 கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து பசும்பால் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர எலும்புக்குள்ளே உள்ள இடர்ப் பாடு நீங்கும். மூன்று நாள்களில் நல்ல பலன் தெரியும்.
தலையணை நனைகிறதா?
படிகாரத்தை நீரில் கரைத்து அடிக்கடி வாய் கொப்பளித்து வர சில நாள்களில் வாயிலிருந்து நீர் (ஜொள்ளு) வடிவது நின்று விடும்.
படுக்கை நனைகிறதா?
குழந்தை படுக்க போவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து நாலைந்து நாள்கள் கொடுத்தால் போதும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தானே நின்றுவிடும்.
வெண் குஷ்டத்துக்கு…
வயதான பழைய வேப்ப மரத்தின் பட்டை 3 கிலோ எடுத்து 8 லிட்டர் நீரில் உடைத்துப் போட்டு 22 லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு 8 துளசி இலைகளையும் மென்று விழுங்க வேண்டும். உணவில் கடுகு. நல்லெண்ணெய், மாமிசம் சேர்க்கக்கூடாது. 40 நாள்களில் நல்ல குணம் தெரியும்.
குன்ம நோய்கள் குணமாக…
புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து துவையல் செய்து நெய்யுடன் சுடச் சுட சாதத்தில் நாலுபிடி பிசைந்து பகலில் மட்டும் நாற்பது நாள்கள் சாப்பிட நாள்பட்ட குன்ம நோய்களும் குணமாகும்.