லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தேங்காய் பால் புளி சாதம்!

Coconut milk Tamarind rice - 2026

தேங்காய் பால் புளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 4
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – அரை தேக்கரண்டி
கல் உப்பு – அரை மேசைக்கரண்டி+அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி – 2
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து தண்ணீர் பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அரைத்த தேங்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுக்கவும். இந்த புளி கரைசலை முக்கால் கப் தண்ணீர் தேங்காய் பாலுடன் கலந்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு ஒரு முறை வதக்கி விடவும்.

பின்னர் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் நறுக்கின தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் புளிக்கரைசலுடன் கலந்து வைத்திருக்கும் தண்ணீர் பாலை ஊற்றவும்.

பிறகு உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது ஒரு முறை கிளறி விட்டு அரிசியை களைந்து போடவும்.

பின்னர் ஒரு நிமிடம் கழித்து அதனுள் பொடி செய்து வைத்திருக்கும் வறுத்த வெந்தயத்தை போட்டு, வெய்ட் போடாமல் மூடி வைக்கவும்.

அதன் பிறகு 2 நிமிடம் கழித்து திறந்து கிளறி விடவும். மீண்டும் 2 நிமிடம் கொதித்ததும் எடுத்து வைத்திருக்கும் திக்கான தேங்காய் பால் ஊற்றவும்.

ஒரு முறை கிளறி விட்டு குக்கரை மூடி வெய்ட் போடவும். 3 விசில்(12 நிமிடம்) வந்ததும் இறக்கி வைத்து விடவும். நீராவி முழுவதும் போனதும் திறக்கவும்.

விரைவில் தயாரிக்கும் புளி தேங்காய்பால் சாதம் தயார். நாம் புளிக்கரைசலை தயாரித்து பிறகு தான் சாதத்தில் போட்டு கிளறுவோம் ஆனால் உடனே தயார் செய்யும் புளிசாதம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories