10 சத இட ஒதுக்கீடு… இங்கும் கிரிமி லேயர்!

modi bjp coucil - 2026

எத்தனை கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் பலமாக ஆதரிக்கிறேன் – 10% இட ஒதுக்கீட்டை!

இந்த,இட ஒதுக்கீடு சமூக சமத்துவத்திற்கான இட ஒதுக்கீடு தத்துவத்திற்கே எதிரானது தான்-சந்தேகமில்லை!

ஓட்டு வங்கி அரசியலுக்கான கீழ்த்தரமான உள்னோக்கம் கொண்டது தான் – ஆம்,சத்தியம்!

என்றாலும் நான் இரு காரணங்களுக்காக உறுதியாக வரவேற்கிறேன்! ஒன்று, ஏற்கனவே போலி சாதி சான்றிதழ் பெறுவதன் மூலமாகவும்,தங்கள் சாதியை தாழ்த்தி இட ஒதுக்கீட்டிற்குள் நுழைந்து அதை அபகரித்து வருவதுமான முன்னேறிய சாதிகளின் சூழ்ச்சிக்கு முற்றுபுள்ளி ஏற்படும்.

மற்றொன்று,விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால்,ஒதுக்கப்பட்ட இடங்கள் ,குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளுக்கே போதுமானதல்ல… என்பது மாத்திரமல்ல, இதனால் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என்பதுமாகும்!

ஆகவே,இதில் உண்மையிலேயே ஏழைகள் பயன்பெறத்தக்க வகையில் சில திருத்தங்களை வலியுறுத்துவதை விட்டுவிட்டு,இதை வறட்டுத்தனமாக எதிர்பதன் மூலமாக பொதுப்பிரிவினரின் வாக்கு வங்கியை ப ஜ காவிற்கு தூக்கி கொடுக்கும் மூர்க்கத்தனம் தேவையற்றது என்பது தான் சி பி எம் மின் அணுகுமுறையாக இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்.

ஆனால்,இதை அனுபவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னேறிய பிரிவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு அவர்களின் மனசாட்சிக்கு ஒரு விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன்! பா ஜ கவும் இதை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.

நீங்கள் ரொம்ப காலமாக சொல்லி வந்தீர்களே..,அந்த கிரிமிலேயரை இந்த 10% இட ஒதுக்கீட்டில் அமல்படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழவேண்டும்-செய்வீர்களா?

ஏற்கனவே பல தலைமுறையாக பலனை அனுபவித்து வரும் பிராமணர்கள் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர், தங்கள் சமூகத்தில் இன்னும் மிகவும் பின் தங்கியுள்ள – மந்திரம் ஓதி உஞ்சவிருத்தி செய்தும்,சமையல் வேலை செய்தும்,கூலி வேலை செய்தும்.,இது வரை வாய்ப்பே பெற்றிராத – ஒண்டுகுடித்தனத்தில் வாழும் – அந்த ஏழை பிராமணன் உள்ளிட்ட மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு வழிவிட்டு.. மனசாட்சியுடன் ஒதுங்கினால்..,உண்மையிலேயே நீங்கள் மிக உயர்ந்தவர்கள் தான் என்பதை நான் மேடை தோறும் முழங்குவேன்..!

  • சாவித்திரி கண்ணன் (பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories