February 21, 2026, 9:43 AM
25.6 C
Chennai

குழந்தைகள் குறும்பு: நகைச்சுவைக்காக மட்டும் அல்ல…!

children play - 2026

குழந்தைகள் குறும்பு – இந்தத் தலைப்பில் மஞ்சரி முதல் இதழ் தொடங்கி சில காலத்துக்கு, குழந்தைகள் செய்த குறும்புத்தனங்களை வாசகர்கள் எழுதியனுப்ப, அதைப் பிரசுரம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே வாசகர்கள் பங்கேற்ற நல்ல பகுதி இது.

மஞ்சரி (1947-48) முதல் வருடத் தொகுதியில் இடம்பெற்ற அந்தப் பகுதியிலிருந்து…
***
தாய்: கண்ணு, எந்த மாம்பழம் உனக்கு? எது அப்பாவுக்கு?

கண்ணன்: பெரிய பழம் எனக்கு. சின்னது அப்பாவுக்கு.

தாய்: பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டாமா? நீ ஏன் சின்னதை எடுத்துக் கொள்ளக் கூடாது?

கண்ணன்: பெரியவர்களுக்கு மரியாதை காட்டுவதற்காக, நான் பொய் சொல்லலாமா அம்மா!
***

இந்த வீட்டிலே ஒரு நிமிஷமாவது நிம்மதி கிடையாது என்று அலுத்துக் கொண்டே கூடத்துக்கு ஓடினாள் தாய். கூடத்திலே தொட்டில் குழந்தையை ஆட்டிக் கொண்டிருந்த சிறுவனின் கூச்சலைக் கேட்டே அவள் இப்படி ஓடினாள்.

அம்மா! தம்பி என் மயிரைப் பிடிச்சு இழுக்கிறான் என்று புகார் சொன்னான் சிறுவன்.

ஏண்டா, அது சின்னக் குழந்தைதானே! மயிரைப் பிடிச்சு இழுத்தால் வலிக்கும்னு தம்பிக்குத் தெரியாது என்று சமாதானம் சொல்லிவிட்டுத் தாய் உள்ளே போனாள்.

அடுத்த நிமிஷமே மறுபடியும் கூடத்திலேயிருந்து கூச்சல் வந்தது. தாய் மீண்டும் ஓடினாள்.

பேசத் தெரியாத தொட்டில் குழந்தை இந்தத் தடவை கத்திக் கொண்டிருந்தது. ஏண்டா தம்பி கத்தறது? என்று தாய் சிறுவனைக் கேட்டாள்.

ஒண்ணுமில்லே, அம்மா. தம்பிக்கு வலி தெரிஞ்சு போச்சு. நான் தெரியப் பண்ணிவிட்டேன் என்றான் சிறுவன்.
***

நான் உன் வயசில்பொய்யே சொன்னதில்லையடா! என்று தன் ஆறு வயது மகன் மணியைப் பார்த்துக் கோபித்துக் கொண்டார் தந்தை சந்திரசேகர்.

பையன் வெகு ஆவலோடு, அப்ப நீங்க எத்தனை வயசிலே அதைச் சொல்ல ஆரம்பிச்சகள், அப்பா? என்று கேட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories