December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

கஜாவினால் கசங்கின இதயங்கள்…

gaja effect - 2025

அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியது

நடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றது

அய்யகோ

எம்மக்கள்
வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி
அலறினர் துடித்தனர்

தோராயமாய் அரசு
குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும்
தாண்டி நீண்டது பாதிப்பு

நகரமோ கிராமமோ
இருளை கக்கியது

குடிசையோ மாடியோ
வெள்ளத்தை பருகியது

வெறும் நீரையே குடித்து நின்றதால்
வீடுகள் மற்றும் மரம் பயிர்கள் சாய்ந்தன
இதில்
மனிதம் மிருகம் பறவைகள் செத்தன

வேறுபாடுகளின்றி
ஒரே புள்ளியில் குழுமி
உணவு தயாரித்து பரிமாறிக்கொண்டன
மனிதநேயம்

வறட்சிக்கும் மழைக்கும் புயலுக்கும்
பலியாவது விவசாயமும் விவசாயியின்
நிம்மதியும் என்பது வாடிக்கை

இப்படி
நொறுங்கிக் கிடக்கும் இதயத்தை மெல்ல
பொறுக்கியெடுத்தபடி
மேலெழ முயற்சிக்கையில்
விவசாயக்கடன்
ஹைட்ரோ கார்பன் மீத்தேன் என
தொடர் தாக்குதல்கள்

அதையும் தாங்கியபடி
இரு கைகளில் விளைவித்த. பயிரினை
அள்ளி நீட்டுகிறான்

அதிலும்
அவன் விளைவித்த தரமான
பயிரினை நம்மிடம் தந்துவிட்டு
தரமற்ற உணவினை உட்கொள்வதை

என்ன சொல்ல…

ஒரு லாரி சத்தம் அல்லது
ஒரு கார் சத்தம் கேட்டாலோ
உணவோ குடிநீரோ என
எழுந்தெழுந்து ஓடிப்போய்ப் பார்ப்பதை

என்ன சொல்ல…

இயற்கை தந்த காயங்கள்
ஒரு புறமிருந்தாலும்
உதவிக்கரங்கள் நீட்டும் அன்பில்
அது ஆறிப்போகட்டும்.

– கவிஞர் கோபால்தாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories