December 5, 2025, 6:03 PM
26.7 C
Chennai

மகளிருக்கான ‘அம்மா ஸ்கூட்டர்’ மானியம் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

amma two wheeler amma admk - 2025

சென்னை: ‘மகளிருக்கான இருசக்கர வாகன மானிய திட்டத்தில், அம்மா ஸ்கூட்டர் பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில், 18 முதல், 40 வயது வரை உள்ள, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள, தனி நபர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மகளிருக்கான, ‘அம்மா’ இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள், புதிதாக வாங்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்தின் விலையில், 50 சதவீதம் அல்லது ரூ.25,000, இதில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு, 50 சதவீதம் அல்லது ரூ.31,250, இதில், எது குறைவோ, அந்த தொகை வழங்கப்படும்.வாகனம், வங்கிக் கடன் வாயிலாக வாங்கப்பட்டால் மானியத் தொகை பயனாளிகளின் வாகனக் கடன் கணக்கிற்கு வங்கி வாயிலாக விடுவிக்கப்படும்.

வாங்கப்படும் வாகனம், புதிய மாசு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம், 1988ன்படி, போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

ammascooter. L styvpf - 2025

மேலும், ‘கியர்லெஸ், ஆட்டோ கியர்’ வகையாகவும், ‘125 சிசி’ குதிரைத்திறன் சக்தி கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, வயது, ஓட்டுனர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு, வாகனம் வாங்கிய ஆரம்ப நிலையிலேயே, மானியத் தொகை விடுவிக்கப்படும்.

பயன் பெற விரும்பும் பயனாளிகள், இன்று முதல், அந்தந்த மண்டல அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, விண்ணப்ப படிவங்களை பெற்று, உரிய சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் – என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. ஒட்டுநர் உரிமம்/எல்.எல்.ஆர்,
  3. இனச் சான்றிதழ்
  4. கல்வி தகுதி சான்று
  5. பணிபுரிவதற்கான சான்று
  6. பணி புரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஊதியச் சான்று/ சுய தொழில் மூலம் பெறும் வருவாய்க்கான சுய அறிவிப்பு சான்று
  7. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
  8. பணிபுரியும் நிறுவனத்தி அடையாள அட்டை
  9. வாகனம் வாங்குவதற்கான விலை பட்டியல்
  10. வரிசை எண் 23இல் குறிப்பிட்ட முன்னுரிமை வகையினருக்கான சான்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories