December 6, 2025, 12:18 AM
26 C
Chennai

மணப்பாறை… ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!

child step hole - 2025

திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. குழந்தை வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த போது 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனாரான அவரது இரண்டாவது மகன் சுஜித் வில்சன் வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

சோளப்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், அங்கு 25 அடி ஆழத்திற்கு தோண்டி, பயன்படுத்தபடாமல் உள்ள ஆழ்குழாய் கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன், எதிர்பாரதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதை கண்டு பதறிப்போன அவனது பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குழந்தையை மீட்க முயன்றனர்.

மணப்பாறையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தனர்.

child step hole1 - 2025

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது! குழந்தையை மீட்பதற்கு தேவையான சிறப்புக் கருவிகள் கொண்டுவரப்படுகிறது!

குழந்தையை உயிருடன் மீட்கும்வரை தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்! மருத்துவக் குழு சம்பவ இடத்தில் இருக்கவும், மருந்து, உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு இடப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தனர். இரண்டு வயது குழந்தையான சுஜித் வில்சன், கிணற்றுக்குள் அமர்ந்த நிலையில், தலைக்கு மேல் கைகளை வைத்த நிலையில் உள்ளான்.

குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories