சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து கழகங்களில் உள்ள 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றது. தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து கழக செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற் சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari