வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள ஊரைச் சார்ந்த முருகேஷ்வரிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவுடன் என்ற ரஜினி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி முருகேஷ்வரியையும் மகள் புவனேஸ்வரியும் காணாமல் தவித்தார். ஒரு வேளை உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. பாலா இடங்களில் தேடியும் அவர், மற்றும் குழந்தையும் காணவில்லை. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயையும், மகளையும் யாரும் கடத்திச் சென்றார்களா இல்லை வீட்டில் கணவன் மனைவி சண்டை காரணமாக எங்கேயும் சென்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண் குழந்தையோடு மாயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari