அனுமதியின்றி முளைத்த திடீர் குருசடி.. இந்து முன்னணி போராட்டத்தால் அகற்றம்!

kumari gurusadi2 - 2026

திடீர் குருசடியை அப்புறப் படுத்த இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அது அகற்றப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மலையடி பஞ்சாயத்தில் திடீரென குருசடி அமைக்கப் பட்டது. கிறிஸ்துவர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் வழியில், பிரதான சாலையில் இருந்து செல்லும் பாதையில் சாலை இடத்தில் கட்டுமானம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸாருக்கும் வருவாய்த் துறையினருக்கும் எச்சரிக்கை செய்து, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இது காவலாளி தங்குவதற்கான அறை என்றும், அங்கே எந்த வழிபாட்டு தலமும் வராது என்றும் கிறிஸ்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, அதனை ஏற்று இந்து முன்னணியினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

kumari gurusadi1 - 2026

இந்நிலையில் இன்று காலை திடீரென அந்த இடத்தில் அந்தோணியார் சிலை, மேரி சிலை, சிலுவை என அனைத்தும் வைக்கப் பட்டு, திடீர் குருசடி முளைத்தது. அந்தப் பகுதிக்கு நேர் எதிரில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதனால், அந்த திடீர் குருசடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி இந்து முன்னணி மீண்டும் போராட்டம் நடத்தியது.

குருசடி அமைத்து சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப் பட்ட சிலைகளை அப்புறப்படுத்தக் கோரி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வெட்ட வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப் பட்டது. இதை அடுத்து அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

kumari gurusadi3 - 2026

இதை அடுத்து குருசடியில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப் பட்டது. பின்னர் அந்த சிலைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு விளவாங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

முன்னதாக இந்து முன்னணியினருடன் விளவாங்கோடு வட்டாட்சியர் புலன்தார தாஸ், களியாக்காவிளை இன்ஸ்பெக்டர் சுமதி பளுகல், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மேல்புறம் ஓன்றிய செயலாளர் ராஜன் உள்பட இந்து முன்னணியினர் பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, திடீர் குருசடியை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த கட்டடம் இப்படியே இருந்தால், மீண்டும் இது போல் சிலைகளை வைத்து குருசடி அமைப்பர் என்பதால், அந்தக் கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர்.

kanyakumari vinayaka - 2026

முறையான அனுமதி பெற்று அவர்கள் இடத்துக்குள் வேண்டுமானால் அமைத்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு முறைகேடாக செயல்படுவது தவறு என்று பலரும் கூறினர். இதை அடுத்து, அந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்துவது குறித்து புதிய மனு அளிக்குமாறு கூறப் பட்டதை அடுத்து, இந்துமுன்னணியினர் அதை ஏற்று கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories