December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

அனுமதியின்றி முளைத்த திடீர் குருசடி.. இந்து முன்னணி போராட்டத்தால் அகற்றம்!

kumari gurusadi2 - 2025

திடீர் குருசடியை அப்புறப் படுத்த இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அது அகற்றப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மலையடி பஞ்சாயத்தில் திடீரென குருசடி அமைக்கப் பட்டது. கிறிஸ்துவர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் வழியில், பிரதான சாலையில் இருந்து செல்லும் பாதையில் சாலை இடத்தில் கட்டுமானம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸாருக்கும் வருவாய்த் துறையினருக்கும் எச்சரிக்கை செய்து, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இது காவலாளி தங்குவதற்கான அறை என்றும், அங்கே எந்த வழிபாட்டு தலமும் வராது என்றும் கிறிஸ்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, அதனை ஏற்று இந்து முன்னணியினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

kumari gurusadi1 - 2025

இந்நிலையில் இன்று காலை திடீரென அந்த இடத்தில் அந்தோணியார் சிலை, மேரி சிலை, சிலுவை என அனைத்தும் வைக்கப் பட்டு, திடீர் குருசடி முளைத்தது. அந்தப் பகுதிக்கு நேர் எதிரில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதனால், அந்த திடீர் குருசடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி இந்து முன்னணி மீண்டும் போராட்டம் நடத்தியது.

குருசடி அமைத்து சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப் பட்ட சிலைகளை அப்புறப்படுத்தக் கோரி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமையில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வெட்ட வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப் பட்டது. இதை அடுத்து அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

kumari gurusadi3 - 2025

இதை அடுத்து குருசடியில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப் பட்டது. பின்னர் அந்த சிலைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு விளவாங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

முன்னதாக இந்து முன்னணியினருடன் விளவாங்கோடு வட்டாட்சியர் புலன்தார தாஸ், களியாக்காவிளை இன்ஸ்பெக்டர் சுமதி பளுகல், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மேல்புறம் ஓன்றிய செயலாளர் ராஜன் உள்பட இந்து முன்னணியினர் பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, திடீர் குருசடியை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த கட்டடம் இப்படியே இருந்தால், மீண்டும் இது போல் சிலைகளை வைத்து குருசடி அமைப்பர் என்பதால், அந்தக் கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர்.

kanyakumari vinayaka - 2025

முறையான அனுமதி பெற்று அவர்கள் இடத்துக்குள் வேண்டுமானால் அமைத்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு முறைகேடாக செயல்படுவது தவறு என்று பலரும் கூறினர். இதை அடுத்து, அந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்துவது குறித்து புதிய மனு அளிக்குமாறு கூறப் பட்டதை அடுத்து, இந்துமுன்னணியினர் அதை ஏற்று கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories