December 5, 2025, 2:05 PM
26.9 C
Chennai

ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

dmk rsbarathi - 2025

பத்திரிகையாளர்கள் – செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மீது அநாகரீக வார்த்தைகளில் அவதூறு செய்த திமுக அமைப்புச் செயலாளர் #ஆர்எஸ்பாரதி யின் வரம்புமீறிய பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம். #திமுக #DMK #RSBharathi தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில்…

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது அமிலம் கக்கும் வார்த்தைகளை வீசுவதும் அவதூறு பேசுவதுமான அவலநிலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய , திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, வாய்க்கு வந்தபடி மிகக் கேவலமாக பத்திரிகையாளர்களையும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களையும் தரக் குறைவாக பேசும் காணொலி சமுக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

வார்த்தைகளில் வரம்பு மீறிய ஆர்.எஸ் பாரதி அவர்கள் தனது தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் , இது போன்ற செயல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலிறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை எப்போதும் ஏற்கிறோம். விமர்சனங்களையும் ஏற்கிறோம். அதே நேரத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை, தரக்குறைவான அவதூறுகள் அநாகரீக பேச்சுக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது போன்ற தரக்குறைவான பேச்சுக்களை பொதுவாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories