கண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா?!

container lion chennai viral - 2026

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன. இது பலருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இது சமூக விரோதிகளின் செயல் என்று விளக்கம் அளித்துள்ளது காவல்துறை.

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னர் வழியாக சிங்கங்கள் வந்தன என்று வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி வெறும் வதந்தியே என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

container lion chennai viral1 - 2026

சென்னை எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்துக்குள் பெண் சிங்கம் குட்டிகளுடன் நடமாடுகிறது, அங்கே செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, ஒருவர் கூறும் பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்தப் படங்களில் ஒன்றில், கண்டெய்னர் அருகில் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதை, சென்னை காட்டுப்பள்ளித் துறைமுகம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அது, குஜராத் மாநிலம், பிபாவவ் துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்டு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் இடம்பெற்றது என்கின்றனர் காவல் துறையினர்.

container lion chennai viral2 - 2026

துறைமுகத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரை தேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்து நடமாடுகின்றனர். இதனால், அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது என்று செய்தி வெளியிடப் பட்டுள்ளது. சமூக விரோதிகள் இந்தப் படங்களை எடுத்து, சென்னை துறைமுகப் படத்துடன் கலந்து, விபத்தில் அடிப்பட்டு ரத்தக் காயத்துடன் போராடும் இளைஞரின் படத்தையும் சேர்த்து, ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது போல் ஒரு கட்டுக் கதையைப் புனைந்து அனுப்பியுள்ளனர் என்கின்றனர் போலீஸார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories