சென்னையில் பலத்த காவல்! சேப்பாக்கம் போலீஸார் கட்டுப்பாட்டில்!

chepauk - 2026

சென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அங்கே, கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் 3 இணை ஆணையர், 10 துணை ஆணையர், 28 உதவி ஆணையர், 80 காவல் ஆய்வாளர்கள் உட்பட 5 ஆயிரம் காவலர்கள் 60 வீடியோ கேமரா, 20 சிசிடிவி கேமரா, 5 டிரோன் கேமரா ஆகியவை பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

முன்னதாக, இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடக்கும் என்றும், நீதிமன்றம் தடை விதித்த போதும், தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடக்கும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

chepauk1 - 2026

இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து வாராகி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப் பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங் களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் சட்டவிரோதமாக நடப்பதாகவும், இதில் சிலர் உயிரிழந்தாக தவறான தகவலை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கூட்டாக இணைந்து பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தவுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் வாராகி மற்றும் சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் இருவரும் முற்றுமை போராட்டத்திற்கு எதிராக வாதாடினர்.

மேலும் போராட்டம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளாதாகவும், சட்டமன்ற முற்றுகையை அனுமதிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார். வாதங்களை கேட்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா, கடந்த கால சம்பவங்களிலிருந்து காவல்துறை இன்னும் பாடம் கற்க வேண்டியிருப்பதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12க்கு ஒத்திவைத்தனர். மேலும் மார்ச் 11 வரை சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

chepauk2 - 2026

சென்னை உயர்நீதிமன்றம் இன்றைய போராட்டத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், மவுண்ட் ரோடு மக்கா மஸ்ஜித்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீதிமன்றத் தடை தங்களுக்குப் பொருந்தாது என்றும், தாங்கள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன.

எதிர்மனுதாரராக தங்களை சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை தங்களுக்கு பொருந்தாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories