December 7, 2025, 3:34 AM
24.5 C
Chennai

கொரோனா: 4 வயது சிறுமிக்கு தொற்று! பீதியில் பல்லாவரம்!

corono 13 - 2025

பல்லாவரம் அருகே 4 வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகெங்கும் இந்நோய் தாக்குதலுக்கு சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் இந்நோயின் தாக்குதலுக்கு 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.

இந்தநிலையில் கடந்த மாதம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தாய் மற்றும் மகன் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி, காந்தி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இச்சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதனால் அவளை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பல்லாவரம், நேரு நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவரும் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

அவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, நோய் தொற்று பரவுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பொழிச்சலூரில் தாய் மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது, மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories