திமுக.,விலிருந்து கே.பி. ராமலிங்கம் ‘நிரந்தர’ நீக்கம்!

kpramalingam - 2026

கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்த கே.பி. ராமலிங்கம், தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆராய வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்து சமூக மட்டத்தில் மடத்தனமான கருத்து என்று விமர்சனம் எழுந்தது.

இது குறித்து தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம், பொதுமக்கள் மனநிலையில் நின்று தனது கருத்தைத் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. விவசாயிகளுக்கு ஊரடங்கில் இருந்து முதல்வா் விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான் என்று கருத்து தெரிவித்தார்.

கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை ஆமோதிக்காமல், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், கொரோனா நேரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது என்று கேபி ராமலிங்கம் கூறியது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சித் தலைமை எது சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பதுதான் உள்கட்சி ஜனநாயகம் என்று வளர்ந்துவிட்ட திமுக.,வில், ஒருவர் கட்சித் தலைமையின் கருத்தை ஆமோதிக்காமல் மறுப்பு சொல்வது கட்சி விரோத நடவடிக்கை என்று கூறினர்.

இதை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்தார். ஆயினும், இது போன்று தலைமையின் அரசியல் நிலவர மனநிலையைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மறுப்பாக கருத்து தெரிவிப்பது, மேலும் பலரை அது போல், பேசத் தூண்டிவிட்டு, திமுக., ஜனநாயக மரபுகளையே குழிதோண்டிப் புதைத்துவிடும் என்று கூறப் பட்டதால், கேபி ராமலிங்கத்தை நிரந்தரமாக நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.

இதற்கான உத்தரவை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Topics

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

Entertainment News

Popular Categories