
சென்னை:
ஒரு லட்சம் ஹோட்டல்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தனியார் உணவக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்கள் பங்கேற்க உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கும். குளிர்சாதன வசதி உள்ள ஹோட்டல்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு உணவக உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கூடுதல் வரி விதிப்பதன் மூலம் உணவுப் பொருள்கள் விலை உயரும். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, உணவகங்கள் மீதான வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



