December 6, 2025, 10:35 AM
26.8 C
Chennai

பட்டியலின மக்களை அவமதித்ததாக… திமுக., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கைது!

rs bharathi arrest - 2025

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து  அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் பாரதியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் சட்டமுகம் என அழைக்கப்படும் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததன் மூலம் பாஜக-அதிமுக தேர்தல் நடவடிக்கைகளை துவங்கிவிட்டது என திமுகவினர் தங்கள் குமுறலைக் கொட்டி வருகின்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்தவர்கள், பழங்குடியின மாணவனை செருப்பைக் கழட்டிவிடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் கைது செய்வார்களா என்று திமுகவினர் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது. திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது… அடுத்து தயாநிதிமாறன் கைது செய்யப் பட வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆர்.எஸ். பாரதி கைது நடவடிக்கை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்ட டிவிட்டர் பதிவு….

தனது கைது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கொரோனா ஊழல் வெளிவந்து விடக்கூடாது என திமுகவை பயமுறுத்தவே கைது நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories