April 28, 2025, 1:38 PM
32.9 C
Chennai

திருமணத்திற்கு சம்மதிக்காத காதலி! கடப்பாரையால் கொன்ற காதலன்!

thilaka

கோவையை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் சிக்கன் கடை வைத்துள்ளார். இவருக்கு வயது 37. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பத்மநாபன் குணம் சரியில்லை. அதனால் அவருடன் குடும்பம் நடத்த முடியாததால், அவரது மனைவி குழந்தைகளையும் அழைத்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

அப்போதுதான் பத்மநாபனுக்கு திலகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. திலகாவுக்கு 33 வயது. இவரும் கல்யாணம் ஆகி, கணவரை பிரிந்தவர். மனைவியை பிரிந்தவரும், கணவனை பிரிந்தவரும் ஆறுதல் தேடிக் கொண்டனர். 2 பேர் வீட்டிலும் ஆள் இல்லாத நேரங்களில் தனிமையில் உறவில் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி திலகாவை கேட்டுள்ளார் பத்மநாபன். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கல்யாண விஷயம் சம்பந்தமாகவே 2 பேருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இவர்கள் தகராறு செய்வதை பார்த்து தான் இரு வீட்டுக்கும் விஷயமே தெரியவந்தது. அதனால் கள்ளக் காதலர்களை கண்டித்தனர். 2 பேரும் சந்திக்க கூடாது என்று கண்டிஷனும் போட்டனர். அவரவர் குடும்பத்தை பாருங்கள், குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள் என்று அட்வைஸ் தந்தனர். இருப்பினும் உறவு தொடர்ந்தது.

காளப்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு ரூமில்தான் பத்மநாபன் நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடுவாராம். அந்த ரூமில்தான் கள்ளக்காதலர்கள் இருவரும் சந்தித்து தனிமையையும் பகிர்ந்து கொள்வார்களாம். அப்படித்தான் சம்பவத்தன்றும் திலகவதி அந்த ரூமுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் கல்யாண பேச்சு எழுந்துள்ளது. திலகாவும் மறுத்துள்ளார்.

ALSO READ:  நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன், கீழே கிடந்த சம்மட்டியை எடுத்து திலகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதை பார்த்து பயந்துபோன பத்மநாபன், அதே ரூமிலேயே வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பீளமேடு போலீசார் அந்த ரூமில் கிடந்த 2 சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையும் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories