December 6, 2025, 5:15 PM
29.4 C
Chennai

கொரோனா: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர் ஒருவருக்கு தொற்று!

corono

துரை அரசு போக்குவரத்து கழகத்தில் வணிகப்பிரிவு ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கூடுதல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்து மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வரும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் 3 நாள் மூடப்பட்டது.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக அலுவலக பணிக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த அரசு போக்குவரத்து கழக வணிகப்பிரிவு ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் 33 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக அரசு போக்குவரத்து கழகத்தில் 95 சதவீத பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு பயந்து அங்கிருந்த கூடுதல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வணிகப்பிரிவு அலுவலர் கூறுகையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அலுவல் பணியாக அடிக்கடி செல்லும் 4 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றார்.

இதனிடையே மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2 நாட்களாக பணிக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற பணியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories