ஃபேஸ்புக்கில் ஃப்ரண்டான கள்ளக்காதலி! காணும் ஆவலில் திருச்சிக்கு சென்று திருட்டுக் கும்பலிடம் மாட்டிய இளைஞர்!

WhatsApp To Merge With Facebook Messenger

முகநூலில் அறிமுகமான இளைஞரை திருச்சிக்கு வரவழைத்து அவரை அடித்து துவைத்து எடுத்து பணம் பறித்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த திருச்சி போலீசார் தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரது மகன் வினோத் குமார் (வயது 31) . இவர், முகநூல் காதலியை நேரில் சந்திக்கும் ஆவலில் திருச்சிக்கு வந்து திருட்டு கும்பலிடம் சிக்கினார். 12 ம் வகுப்புவரை படித்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. வெப்டிசைனராக பணியாற்றி வந்த வினோத்குமார் பலமணிநேரம் முகநூல், வாட்ஸ் அப்பில் மூழ்கி கிடப்பது வழக்கம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் கம்பெனி ஒன்றின் வெப் டிசைனில் ஈடுபட்டிருந்தபோது தனது முகநூல் கணக்கில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்து ஆபாச படம் ஒன்றை அனுப்பி நண்பராக இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சபலத்திற்கு ஆளான வினோத் குமார் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் தாங்கள் குறித்த தகவல்களை பரிமாறிய நிலையில் ஒரு கட்டத்தில் வினோத் குமாரிடம் செல்போன் எண்ணை வாங்கிய நிஷா என்ற அந்த பெண் பேசியுள்ளார். வினோத்குமாரை காண வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளார் நிஷா. மேலும், வினோத்குமாரை கடந்த 5 ம் தேதி திருச்சிக்கு வருமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேலை விஷயமாக திருச்சிக்கு செல்வதாக பொய் கூறி தனது முகநூல் காதலியை நேரில் பார்க்கும் ஆவலில் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி சென்றிருக்கிறார்.

திருச்சி சென்றதும் நிஷாவிற்கு போன் செய்துள்ளார் வினோத்குமார். அவரிடம், காஜாமலைக்கு வருமாறும் அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நிஷா.

பள்ளி விடுமுறை என்பதால் ஆள் அரவமின்றி இருந்த அப்பகுதிக்கு வந்த வினோத்குமாரிடம் அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு ஓடியது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இந்த திடீர் செயலால் செய்வதறியாது திகைத்து நின்ற வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

நிஷாவின் போன் நெம்பரை வைத்து அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிஷா அனைத்து விபரங்களையும் கூறவே இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 147, 342,294 , 364, 395, 397, 506(2)மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories