December 5, 2025, 4:25 AM
24.5 C
Chennai

சென்னையில் காலை முதல் மழை; 1ம் எண் புயல் எச்சரிக்கை: தென்மாவட்டங்களில் கன மழை!

சென்னை :

சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு,தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று காலை 11 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரத்திலும் காலை 11 மணிவரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் மாவட்டங்களில் பகல் 12 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பகல் 12 மணிவரை கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்:

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீனபிடிக்க செல்லவில்லை.

இந்திய பெருங் கடலில் கன்னியாகுமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் மழை குறையும்.

கடல் சீற்றம் இன்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை – பொம்மையார்பாளையத்தில் ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. கும்பகோணம் நகரில் காலையில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.

திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories