சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனனை சந்தித்தற்கு பின் அதிமுக எம். பி. மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரிய சவால் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றும் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

