December 6, 2025, 1:50 AM
26 C
Chennai

கை விரலில் வலி.. வைத்தியம் பார்க்க சென்ற சிறுமி நேர்ந்த பரிதாபம்!

hema
hema

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் டாக்டர் முத்தூஸ் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது 7 வயது மகள் ஹேமாவுடன் வருகை தந்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமி, விளையாடிக் கொண்டிருக்கும் போது கதவின் இடுக்கில் கை விரல் சிக்கியதாகவும், அந்த விரலில் வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வலியை குறைப்பதாக சிகிச்சை அளிக்க சிறுமிக்கு ஊசி போட்ட நிலையில், சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

அதன் பின்னர் நாள் முழுவதும் சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் தனியாக வைக்கப்பட்ட நிலையில், பெற்றோரைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் மறுநாள் பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்த பின்னர், சுயநினைவில்லாமல் இருந்த சிறுமியை பார்க்க அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுமி 27 ஆம் தேதி மாலை சுய நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மகள் இறந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏற்கனவே இதே மருத்துவமனையில் சரவணம்பட்டியில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் கிளையில் சிறுமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories