கொரோனா: மதுரையில் 800 படுக்கைக்கு டன் கேர் சென்டர்!

corono - 2026

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் ‘கேர் சென்டர்’கள் துவங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 800 படுக்கைகளுடன் பிரமாண்ட ‘கேர் சென்டர்’ ஒன்று அமைகிறது.

மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 100ஐ கடந்து விட்டது. சிகிச்சை பெறுவோர் விகிதம் கணிசமாக உயர்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கும் பணி நடக்கிறது.

தற்போது 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த முறை தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில், லேசான கவனிப்பு தேவைப்படுவோர் தோப்பூர் மருத்துவமனையில், அறிகுறியின்றி பாதிக்கப்பட்டோர் கொரோன கேர் சென்டர் மற்றும் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்பட்டனர்.

care center - 2026

தற்போது மீண்டும் கொரோனா ‘கேர் சென்டர்’களை துவங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பல்கலை அருகே வடபழஞ்சி எல்காட் நிறுவன கட்டடம் கொரோனா கேர் சென்டராக மாற்றப்படுகிறது. இங்கு ஒரே இடத்தில் 800 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதனுடன் அத்தியாவசிய மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘லேசான, அறிகுறியில்லாத நோயாளிகளை கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்க உள்ளோம். ஒரே இடத்தில் பலரை அனுமதித்தால் கவனிப்பது எளிது. இதற்காக எல்காட் கட்டடத்தில் பிரமாண்ட சென்டர் அமைக்கப்படும். தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் பயன்படுத்தப்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories