கடைக்கு வந்த சிறுமிகளை கடித்து பாலியல் தொல்லை! ஊராட்சி மன்ற கிளார்க் கைது!

Chandrasekhar lalkudi
Chandrasekhar lalkudi

லால்குடி அருகே குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்த பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பல்லபுரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் அழகுராஜா (35) பிரபாவதி (28) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது, இதே போன்று அதே தெருவில் வசித்துவரும் சசிகுமார் (45) பிரியா (38) இவர்களுக்கு 9 வயது உள்ள ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

அதே ஊரில் மாரியம்மன் கோவில் தெருவில் பல்லபுரம் ஊராட்சி மன்ற கிளர்க் சந்திரசேகர் (53) தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் வீட்டிலிருந்து அழகுராஜாவின் 6 வயது உள்ள மகளும், சசிகுமாரின் 9 வயது உள்ள மகளும்,
இரண்டு பெண் குழந்தைகளும் சந்திரசேகர் நடத்திவரும் பெட்டி கடைக்கு தின்பண்டங்கள் வாங்க சென்று உள்ளனர்.

அப்போது சந்திரசேகர் அந்த இரண்டு பெண் குழந்தைகளிடமும் ஆசை வார்த்தை கூறி சாக்லேட் கொடுத்து அந்த குழந்தைகளிடம் உதடு மற்றும் மார்பகங்களில் கடித்து சந்திரசேகர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த நிலையில் கடை சென்ற குழந்தைகள் வெகு நேரமாகியும் வீட்டிற்க்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர்,

அப்பொழுது வாய் மற்றும் உடலில் காயங்களுடன் அழுது கொண்டு வந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளிடம் விசாரித்தபோது,
சந்திரசேகர் தகாத முறையில் நடந்தது கூறியதை அடுத்து கோபம் கொண்டு பல்லபுரம் பஞ்சாயத்து கிளார்க் தேடிச் சென்றனர், ஆனால் பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகர் தப்பி ஓடி சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமுற்ற இரண்டு குழந்தைகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் வழக்குப் பதிவு செய்து பஞ்சாயத்து கிளார்க் சந்திரசேகரை கைது செய்தனர்.

மேலும் பல்லபுரம் கிராம மக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories