ஏசியிலிருந்து விழுந்த எலி.. கை விட்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்!

ac
ac

66 வயதான ஶ்ரீதரன் என்ற நபர், சென்னை பள்ளிக்கரணை வ.ஊ.சி தெரு சிண்டிகேட் பேங்க் காலனியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருகிறார்.

இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் உள்ள ஏசியில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு, இறந்து போன எலி ஒன்று திடீரென இவரது கட்டிலில் விழுந்துள்ளது.

இதனை பார்த்த ஶ்ரீதரன் ஏசிக்குள் வேறு ஏதும் எலி உள்ளதா என்று பார்ப்பதற்காக ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

sritharan
sritharan

அப்போது உள்ளே ஏதோ தென்பட, அது மின்சார வயர் என்று கையை வைத்து இழுத்துள்ளார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக, உள்ளே இருந்த கொடிய விஷம் வாய்ந்த நல்லபாம்பு அவரது கையின் 2 விரலில் கொத்தியுள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அனுமதிக்க மறுத்ததால் அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், மாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

snake
snake

பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் உடலை குரோம்பபேட்டை அர மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், தீயணைப்பு துறையினர் ஶ்ரீதரனை கடித்த நல்லபாம்பை பிடித்துச்சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories