ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இங்கே நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீரங்கம் தேர்தலில் யாராவது கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். 741 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாளை பயன்படுத்தப்பட உள்ளது. தமிழக போலீசார் 2 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
Popular Categories



