February 22, 2026, 9:17 AM
26.1 C
Chennai

நடத்துனராக இருந்து சிஸ்டத்தை மாற்ற வரும் ‘காலா’-வே! எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்து தீவிர அரசியலில் ரஜினி !

சென்னை:
தீவிர அரசியலில் குதிக்கப் போவதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது முதல் அரசியல் நிகழ்வில் பங்கேற்றார். வெள்ளை உடையில் தோற்றம் தந்து தனது ஆன்மிக அரசியல் நிகழ்வில் பங்கேற்றார் ரஜினி.

ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்ததை அடுத்து, மக்கள் மன்றம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக, நிர்வாகிகளை நியமித்து வரும் அவர், விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை இன்று ரஜினிகாந்த் திறந்து வைத்தார். தீவிர அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினி பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது.

ஆன்மிக அரசியல் என்ற முழக்கத்தை முன் வைத்த ரஜினி, அதன் வெளிப்பாடாக அமைந்த வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் மேடை ஏறி, தனது அரசியல் அச்சாரத்தைப் பதித்தார்.

ரஜினி காந்த் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்காக, கோயம்பேட்டிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வழி நெடுகிலும் பேனர்கள், கட்-அவுட்கள் வைத்திருந்தனர். வழி எங்கும் திரண்டிருந்த ரசிகர்கள், பலத்த ஆரவாரத்துடன் ரஜினியை வரவேற்றனர்.

விழா நடைபெறும் இடத்துக்கு அதே பரபரப்பு குறையாமல் வந்து, எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைத் திறந்துவைத்தார் ரஜினி. பிரபு, விஜயகுமார், பி.வாசு, லதா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பின்னணி கொண்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக இன்று கலந்து கொள்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாணவர்களிடையே பேசவிருக்கிறார் ரஜினி. மேலும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.

rajini banner - 2026

இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அதிமுக எம்.பி.யும் புதிய நீதிக்கட்சியை நடத்தியவருமான ஏ.சி சண்முகம். கடந்த வாரம் ரஜினிக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி நிறுவனம் மற்றும் ரஜினி ரசிகர்கள் இணைந்து மிகப் பெரிய அளவில் ரஜினியை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.

இதற்காக வைக்கப் பட்ட பேனரில், தர்மத்தின் தலைவனே வருக ! தமிழகத்தின் எதிர்காலமே ! எங்கள் காலாவே, எங்கள் வாழ்வே! நடத்துனராக இருந்து சிஸ்டத்தை மாற்ற வரும் ‘காலா’-வே வருக ! என்றெல்லாம் சூட்டைக் கிளப்பியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories