January 19, 2025, 8:49 AM
23.5 C
Chennai

யாருடன் எல்லாம் கூட்டணி கிடையாது தெரியுமா? கமல் புதிய முடிவு!

சென்னை:
தான் யாருடன் எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது குறித்து சத்தியம் செய்து அறீத்துள்ளார் கமல். அதாவது, கயவர்களுடனும், திருடர்களுடனும் கூட்டணி கிடையாது என உறுதியாக சத்தியம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ” தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம்தான் அகிம்சை!

தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை! எந்த விஷயத்திலும் மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும் நியாயமும் தெரியும். எனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்டத் தெரியும் என்பதை மீசையை முறுக்கிச் சொல்வேன்.

கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ஆனால் இது போதாது… இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடிப் பெண்கள் பிறக்காமலேயே இறந்து போயுள்ளனர்.

ALSO READ:  பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச் சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. ஒரு நல்ல இயக்கம் மக்கள் உடன் தன் கூட்டணி வைத்துக்கொள்ளும் !

    சந்தர்ப்பவாத சுயநல அரசியல்வதிகள் தன் குட்டு அமைத்தது சுயபலன் அடைவார்கள் !

    கூட்டணி என்பது பதவிகாக மட்டும்தான் மக்கள் நலன்காக்க அல்ல !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.