யாருடன் எல்லாம் கூட்டணி கிடையாது தெரியுமா? கமல் புதிய முடிவு!

சென்னை:
தான் யாருடன் எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது குறித்து சத்தியம் செய்து அறீத்துள்ளார் கமல். அதாவது, கயவர்களுடனும், திருடர்களுடனும் கூட்டணி கிடையாது என உறுதியாக சத்தியம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ” தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம்தான் அகிம்சை!

தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை! எந்த விஷயத்திலும் மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும் நியாயமும் தெரியும். எனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்டத் தெரியும் என்பதை மீசையை முறுக்கிச் சொல்வேன்.

கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ஆனால் இது போதாது… இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடிப் பெண்கள் பிறக்காமலேயே இறந்து போயுள்ளனர்.

திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச் சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

1 COMMENT

  1. ஒரு நல்ல இயக்கம் மக்கள் உடன் தன் கூட்டணி வைத்துக்கொள்ளும் !

    சந்தர்ப்பவாத சுயநல அரசியல்வதிகள் தன் குட்டு அமைத்தது சுயபலன் அடைவார்கள் !

    கூட்டணி என்பது பதவிகாக மட்டும்தான் மக்கள் நலன்காக்க அல்ல !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories