சிதம்பரத்தின் ஒத்துழைப்பில்லாமல் கார்த்தி தவறுகள் செய்திருக்க முடியாது: ஹெச்.ராஜா

Published:

h raja - 2026

சென்னை: சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், கார்த்தி சிதம்பரம் இவ்வளவு தவறுகள் செய்திருக்க முடியாது என்ற தனது ஐயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. மேலும், கார்த்திக்கிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின் ‘சீனியர்’ சிதம்பரம் கைதாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மகன் கார்த்திக்கிற்கு மீண்டும் 3 நாட்கள் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு. முழு விசாரணைக்குப் பின் சீனியர் சிதம்பரம் கைதாகலாம். கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது

 

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் விசாரிக்கப் பட்டு வருகிறார். தன் தந்தை கொடுத்த தைரியத்தில், வாய் திறக்காமல் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், சிபிஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு கார்த்திக்கை உட்படுத்த பரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img