தேசியக் கொடியை எரித்து சமூகத் தளங்களில் பகிர்ந்த ஆசிரியர் கைது!

Published:

burning flag teacher arrested1 horz - 2026

தேசியக் கொடியை எரித்து முகநூலில் பகிர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசியராக வேலை செய்தவர் பிரபுபதி. இவர், தனது முகநூல் பக்கத்தில், மத்திய அரசைக் கண்டித்து, தேசியக் கொடியை எரித்து, அதை புகைப்படம், வீடியோ எடுத்து பதிவு செய்திருந்தார்.

காவிரி விவகாரம் தமிழகத்தில் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது செயல் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. மத்திய அரசை விமர்சித்து, தேசியக் கொடியை எரித்து அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் பயனாளிகள் பலரே கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தேசியக் கொடியை எரித்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரபுபதியை போலீஸார் கைது செய்தனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img