January 19, 2025, 9:43 AM
25.7 C
Chennai

இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களை திரையிடக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. அடுத்து டிவி., பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் அதுவரை நிறுத்தப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, தமிழகத்தில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குக் காரணமாக, இளைஞர்கள் ஐபிஎல் போட்டியால் திசை திரும்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்க வரமாட்டார்கள், அவர்களின் கவனம் ஒருமுகப் படுத்தப் பட வேண்டும். எனவே ஐபிஎல் கேளிக்கைக்கு இங்கே இடமில்லை என்று முழங்கினர்.

இந்தப் போராட்டங்களில் முன்னாள் சினிமா இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதில் வன்முறை வெடித்ததும், ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற இளைஞர்களின் டீசர்ட்கள் கிழிக்கப் பட்டதும், கழற்றச் சொல்லி அடித்து உதைத்து அனுப்பியதுமாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப் பட்டன.

இதனால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

ALSO READ:  இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

இந்நிலையில், காவிரிக்காக திரையுலகினர் திரண்டு வந்து அரை நாள் மௌனப் போராட்டம் நடத்தி வெறுமனே கண்கட்டு நாடகம் நடத்தினால் போதாது, புதிய படங்கள் திரையிடப் படக் கூடாது என்பது மட்டுமல்ல, திரையரங்குகளே ஒட்டு மொத்தமாக மூடப் பட வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும், காவிரி நீர் நம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வீட்டுப் பெண்களுக்கும் இன்றியமையாதது. அவர்கள்தான் காவிரிக்காக போராட வேண்டும். எனவே, டிவி.,க்களில் வரும் சீரியல்களுக்கு தடை விதித்து, பொழுது போக்குகளை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, டிவி.,க்களில் பொழுது போக்கு சீரியல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது. தமிழகமே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இழவு வீடாகக் காட்சி அளிக்கும் போது, இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.