18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23க்கு ஒத்திவைப்பு

Published:

02 June14 high court - 2026

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு நீதிபதி சத்யநாராயணா ஒத்தி வைத்தார்.

ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினமும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சத்யநாராயணா தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img