திருச்சி: திருச்சி அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பம் உண்டாக்கிய 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்தச் சிறுமி, தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை நேற்று கைது செய்தனர். அந்தச் சிறுமி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்: 70 வயது முதியவர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari