ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

IMG 20180808 103025 - 2026

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். நெரிசல் காரணமாக தொண்டர்கள் 25 பேர் காயமுற்றனர்.

இதனிடையே மீண்டும் ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.  எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம்(60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்தார். 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.இதை அடுத்து தொண்டர்களிடம் உற்சாகம் கூடியது.  ராஜாஜி ஹாலில் கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசிய போது,  நாம் ஆழ்ந்த சோகத்தில் உள்ளோம். கருணாநிதி விட்டுக் கொடுக்காத போராளி. போராட்ட குணம் கொண்டவர். இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்.

மறைந்த பிறகும் இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். முதல்வரை சந்தித்து இடம் ஒதுக்க கோரியும் அவர் செவி சாய்க்க வில்லை. ஐகோர்ட் நமக்கு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. கருணாநிதியின் உணர்வை நிறைவேற்றியுள்ளேன்.  

தொண்டர்கள் படியேறி மேலே வரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தயவு செய்து கலவரத்திற்கு இடம் தர வேண்டாம். போலீசார் உரிய ஒத்துழைப்பு தராவிட்டாலும், நாம் அமைதி காக்க வேண்டும். உங்களின் சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன். தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள். அமைதியாகக் கலைந்து சென்றால்தான், இறுதி ஊர்வலத்தைத் துவக்க முடியும். இதற்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்… என்று கூறினார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories