சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

04 Aug29 Madras High Court - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

இதை அடுத்து,  சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories