சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

04 Aug29 Madras High Court - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

இதை அடுத்து,  சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories