December 5, 2025, 8:58 PM
26.7 C
Chennai

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

04 Aug29 Madras High Court - 2025

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

இதை அடுத்து,  சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories