சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

04 Aug29 Madras High Court - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

இதை அடுத்து,  சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories