February 21, 2026, 12:10 AM
26.7 C
Chennai

தென்காசி பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழு மீண்டும் ஆய்வு!

1538487438035 e1538534246185 - 2026தென்காசி அம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலுக்குள்பட்ட பகுதியை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் வழக்கறிஞர் ஆணையர் குழு இன்று 2 வது முறையாக ஆய்வு மேற்கொண்டது.

IMG 20181002 151054623 e1538534273736 - 2026நெல்லை மாவட்டம், தென்காசியில் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் அருகில் அம்மன் சன்னதியில் ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அதை பராமரிக்கவும் அனுமதி கோரி கடந்த 2014ஆம்ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காஜாமைதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

1538505953603 e1538534296299 - 2026இதே போல இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று கூறியும், கட்டடத்தை பராமரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி சார்பிலும், குமார், சோலை கண்ணன் ஆகியோர் சார்பிலும் மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. கோவில் மற்றும் தொழுகை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டு சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

IMG 20181003 005103 - 2026இந்நிலையில் பஜார் பள்ளிவாசல் நிலத்தை அளவீடு செய்து தருமாறு, பள்ளிவாசல் கமிட்டி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு, இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞர்கள் நிரஞ்சன் எஸ்.குமார், ரகுவரன் கோபாலன் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது.

IMG 20181003 002026 e1538534336414 - 2026இக் குழுவினர் தென்காசி பஜார் பள்ளிவாசலில் கடந்த 09.12.17 அன்று சம்மந்தப்பட்ட இடத்தை மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் , வழக்கறிஞர் ஆணையர்களாக நிரஞ்சன், ரகுவரன் கோபாலன், கார்த்திக், காஜா மொகைதீன், முனிசிபல் வழக்கறிஞர் அதிவீரபாண்டியன், ராஜா மற்றும் தலைமை சர்வேயர் ஆனந்த் சேகர், சர்வேயர் சரவணன் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழு மற்றும் கோவில் நிர்வாகதினர் சம்பந்தபட்ட இடத்தை அளந்து குறித்து கொண்டு சென்றனர்.

1538506102153 1 e1538534360269 - 2026இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆணையர்களான
நிரஞ்சன், ரகுவரன் கோபாலன் ஆகியோர் தலைமையிலான குழு 2 வது கட்டமாக இன்று மதியம் தென்காசி வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

IMG 20181003 002340 e1538534383260 - 2026இந்த கட்டடத்தின் அளவுகள் குறித்த அறிக்கை மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு செய்து அவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.

IMG 20181003 002359 e1538534410895 - 2026இந்த ஆய்வை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

IMG 20181003 002042 e1538534430280 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories