December 5, 2025, 9:01 PM
26.6 C
Chennai

தென்காசி பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழு மீண்டும் ஆய்வு!

1538487438035 e1538534246185 - 2025தென்காசி அம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலுக்குள்பட்ட பகுதியை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் வழக்கறிஞர் ஆணையர் குழு இன்று 2 வது முறையாக ஆய்வு மேற்கொண்டது.

IMG 20181002 151054623 e1538534273736 - 2025நெல்லை மாவட்டம், தென்காசியில் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் அருகில் அம்மன் சன்னதியில் ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அதை பராமரிக்கவும் அனுமதி கோரி கடந்த 2014ஆம்ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காஜாமைதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

1538505953603 e1538534296299 - 2025இதே போல இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று கூறியும், கட்டடத்தை பராமரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி சார்பிலும், குமார், சோலை கண்ணன் ஆகியோர் சார்பிலும் மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. கோவில் மற்றும் தொழுகை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டு சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

IMG 20181003 005103 - 2025இந்நிலையில் பஜார் பள்ளிவாசல் நிலத்தை அளவீடு செய்து தருமாறு, பள்ளிவாசல் கமிட்டி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு, இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞர்கள் நிரஞ்சன் எஸ்.குமார், ரகுவரன் கோபாலன் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது.

IMG 20181003 002026 e1538534336414 - 2025இக் குழுவினர் தென்காசி பஜார் பள்ளிவாசலில் கடந்த 09.12.17 அன்று சம்மந்தப்பட்ட இடத்தை மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் , வழக்கறிஞர் ஆணையர்களாக நிரஞ்சன், ரகுவரன் கோபாலன், கார்த்திக், காஜா மொகைதீன், முனிசிபல் வழக்கறிஞர் அதிவீரபாண்டியன், ராஜா மற்றும் தலைமை சர்வேயர் ஆனந்த் சேகர், சர்வேயர் சரவணன் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழு மற்றும் கோவில் நிர்வாகதினர் சம்பந்தபட்ட இடத்தை அளந்து குறித்து கொண்டு சென்றனர்.

1538506102153 1 e1538534360269 - 2025இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆணையர்களான
நிரஞ்சன், ரகுவரன் கோபாலன் ஆகியோர் தலைமையிலான குழு 2 வது கட்டமாக இன்று மதியம் தென்காசி வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

IMG 20181003 002340 e1538534383260 - 2025இந்த கட்டடத்தின் அளவுகள் குறித்த அறிக்கை மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு செய்து அவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.

IMG 20181003 002359 e1538534410895 - 2025இந்த ஆய்வை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

IMG 20181003 002042 e1538534430280 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories