இறைவன் ஜடப் பொருள் அல்ல: சட்டப் போராட்டம் நடத்துகிறது ஐயப்ப சேவா சமாஜம்!

aiyappan - 2026

கோவிலை பொது இடம் என்றும், இறைவனை ஜடப்பொருள் என்றும் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த துரதிருஷ்டவசமான தீர்ப்பால் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மனவேதனையையும், துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்த கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.” என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயலர் என்.ராஜன் புது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில்,

10 முதல் 50 வயது வரையிலுள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற கோவில் கட்டுப்பாட்டை எதிர்த்து “YOUNG LAWYERS ASSOCIATION” என்ற அமைப்பால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டெம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கோடிக்கணக்கான இந்துக்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அதே நேரம், அமர்வின் ஒரே பெண் நீதிபதியான  இந்து மல்ஹோத்ரா அவர்கள் இந்துக்களின் உணர்வுகளையும், கோவிலின் புனிதத் தன்மையையும் உணர்ந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் இதயத்தை தொட்டுவிட்டது. பல்வேறு காரணங்களால் இந்த தீர்ப்பு ;மிகவும் துரதிருஷ்டவசமானது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

கோவில் என்பது பொது இடம் என்றும், இன்றும் சாநித்தியமாக இருப்பதாக கருதி இந்துக்கள் வணங்கும் கடவுளை உயிரற்ற ஜடப்பொருள் என்றும் சித்தரித்து அதனால், அந்த கடவுளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எந்த அடிப்படை உரிமைகளும் கிடையாது என்பதான விவரிப்புகளுக்கு, சாதி மதம் இனம், மொழி, பாலினம் ஆகிய வேறுபாடுகளை கடந்து கேரளாவிலிருந்து மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தீர்ப்புக்கும் தங்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிறிய அளவிலான சிறுபான்மையினரின் ஆதரவு இந்த தீர்ப்புக்கு கிடைத்து வருவது நாட்டில் அமைதியையும், சகிப்புத்தன்மையையும் சீர்குலைத்து பிரிவினையையும், பூசல்களையும் தோற்றுவிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் அதேவேளையில், இந்த தீர்ப்பு மிகவும் துரதிருஷ்டவசமானது எனக்கூறி கீழ் காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். · தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது  இறுதி ஆணை வரும் வரை, தற்போதைய தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் நிறுத்தி வைப்பது · மிகவும் முக்கியமான இந்த விஷயத்தில் சிறப்பு கமிஷன் அமைத்து ஆராய்வது…

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

கோவிலை பொது இடம் என்றும், இறைவனை ஜடப்பொருள் என்றும் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த துரதிருஷ்டவசமான தீர்ப்பால் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மனவேதனையையும், துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்தக்கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.,., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories