December 5, 2025, 6:03 PM
26.7 C
Chennai

பணியின் போது மரணமடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனுக்கு அஞ்சலி!

samuthram anjali2 - 2025வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் மாரடைப்பால் காலமான தர்மபுரி தினமணி செய்தியாளர் சமுத்திர ராஜன் படத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி, தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் செய்தியாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

samuthram anjali - 2025

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சமுத்திர ராஜன்! பத்திரிகையாளராக சிறுவயதிலேயே பணிக்கு வந்துவிட்டவர். பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றி, ஐந்து வருடங்கள் முன்னர் தினமணி இதழில் பணிக்குச் சேர்ந்தார். இவர் திருச்சியில் இருந்து தருமபுரிக்கு பணி இட மாற்றம் செய்யப் பட்ட ஓரிரு நாளிலேயே மன அழுத்தம் தாங்காமல், உடன் பணி செய்யும் பலரிடமும் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

samuthirarajan thumb - 2025வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவர், தொங்கிய முகத்துடன் இருந்துள்ளார். அவரிடம் சக பணியாளர்கள் விசாரித்துள்ளனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில், தன் வாழ்வே சூனியமானது போல் உணர்ந்து, நெஞ்சடைத்து திடீரென அந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

samudram ajali - 2025இதை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்லப் பட்டு, சனிக்கிழமை இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பட்டன. அவரது இறுதிச் சடங்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த சக பத்திரிகை யாளர்கள், நிருபர்கள் கலந்து கொண்டனர்.  அவரது குடும்பத்தாருக்கு செய்தியாளர்கள், சக பத்திரிகையாளர்கள் தங்கள் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனின் குடும்பத்தாருக்கு நிர்வாகத்தின் சார்பிலும், அரசு சார்பிலும் நிதி உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories