பணியின் போது மரணமடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனுக்கு அஞ்சலி!

samuthram anjali2 - 2026வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் மாரடைப்பால் காலமான தர்மபுரி தினமணி செய்தியாளர் சமுத்திர ராஜன் படத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி, தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் செய்தியாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

samuthram anjali - 2026

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சமுத்திர ராஜன்! பத்திரிகையாளராக சிறுவயதிலேயே பணிக்கு வந்துவிட்டவர். பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றி, ஐந்து வருடங்கள் முன்னர் தினமணி இதழில் பணிக்குச் சேர்ந்தார். இவர் திருச்சியில் இருந்து தருமபுரிக்கு பணி இட மாற்றம் செய்யப் பட்ட ஓரிரு நாளிலேயே மன அழுத்தம் தாங்காமல், உடன் பணி செய்யும் பலரிடமும் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

samuthirarajan thumb - 2026வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவர், தொங்கிய முகத்துடன் இருந்துள்ளார். அவரிடம் சக பணியாளர்கள் விசாரித்துள்ளனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில், தன் வாழ்வே சூனியமானது போல் உணர்ந்து, நெஞ்சடைத்து திடீரென அந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

samudram ajali - 2026இதை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்லப் பட்டு, சனிக்கிழமை இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பட்டன. அவரது இறுதிச் சடங்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த சக பத்திரிகை யாளர்கள், நிருபர்கள் கலந்து கொண்டனர்.  அவரது குடும்பத்தாருக்கு செய்தியாளர்கள், சக பத்திரிகையாளர்கள் தங்கள் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனின் குடும்பத்தாருக்கு நிர்வாகத்தின் சார்பிலும், அரசு சார்பிலும் நிதி உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories