December 6, 2025, 3:55 PM
29.4 C
Chennai

கவலப்படாதீங்க.. டிஆர்… சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பப் பெண்ணே கிடைப்பா…!

t rajendar - 2025

கவலைப்படாதீங்க சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பத்திலிருந்து பெண் கிடைப்பாள் என்று டி ராஜேந்திருக்கு ஆறுதல் கூறுகிறார்கள் சமூகவலைதளத்தில்!

சிம்புவின் திருமணம் குறித்த கேள்வி தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது என்று தன்னுடைய வருத்தத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார் டி ராஜேந்தர்! இந்நிலையில், அவருடைய வருத்தத்துக்கு ஆறுதலாக சிலர் சமூக வலைதளங்களில் இவ்வாறு பதிவிட்டு வருகின்றனர்

டி ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கும் இஸ்லாமியப் பெண்ணான நபீலாவுக்கும் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது! இதற்காகவே இஸ்லாமியராக மதம் மாறினார் குறளரசன். அதை அடுத்து, இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்!

இதை அடுத்து, திங்கள் கிழமை நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என பலரும் இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி ராஜேந்தர். அப்போது அவர் என்னுடைய இளைய மகன் திருமணத்தைப் பொறுத்தவரை நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் இல்லை; மதம் பார்க்க மாட்டேன் என்று சினிமாவில் மட்டும் சொல்பவன் இல்லை; என்னைப் பொறுத்தவரை என் மகன் மனதுக்கு பிடித்து இருக்கிறதா கல்யாணம் செய்துகொள்; உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கக் கூடியவன்!simbu nayanthara1 - 2025

எல்லோருமே அவரவர் குழந்தைகளின் நலனுக்காக தான் வாழ்கின்றனர்! அவர்களை படிக்க வைப்பதாகட்டும் உருவாக்குவதாகட்டும்… நான் என் பிள்ளைகளை நடிக்க வைத்தேன்; மியூசிக் அடிக்க வைத்தேன்; ஆயினும் ஓரளவுக்கு படிக்க வைத்தேன்!

ஆனால் மற்ற தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்; ஆளாக்குகின்றனர்! ஆனால் கல்யாணம் என்று வரும்போது அப்பா அம்மா விருப்பப்படிதான் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது! இது என் கருத்து !

பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கி தருகிறோம் பைக் வாங்கித் தருகிறோம் அதுபோல் கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்க கூடிய பெற்றோராக எல்லோரும் இருக்க வேண்டும்! ஆனால் அப்படி எல்லோராலும் இருக்க முடியாது! ஒவ்வொரு தாய் தந்தைக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் நல்ல தாய் தந்தையாக இருக்க நாம் முயற்சிக்க வேண்டும்… என்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார் டி ராஜேந்தர்!

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்று கேள்வி கேட்டார். இறைவன் அருளால் விரைவில் நடக்கும்; வெளிப்படையாக சொன்னால் இதுதான் எனக்கு மனத்தாங்கல் ஆக இருக்கிறது! உங்கள் மீது எனக்கு வருத்தம்  இல்லை இந்த கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வைத்திருக்கிறானே! விதி என்னை வைத்திருக்கிறதே என்ற வருத்தம்! ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும் விதியின் மீது மட்டும் தான்!simbu - 2025

கேள்வி கேட்பது உங்கள் கடமை; பதில் சொல்வது என் கடமை! ஆனால் பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை!.. என்று பதிலளித்தார் டி ராஜேந்தர்!

டி ராஜேந்தரின் இந்த மனத்தாங்கலுக்கு பதிலாக சமூக வலைதளங்களில் சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பத்து பெண் அமைவாள்! அதனால்தான் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாராவுடன் அவருக்கு செட் ஆகாமல் போய்விட்டது! இன்னும் என்னவெல்லாமோ அவர் முயற்சி செய்தும் அதெல்லாம் நடக்காமல் போய்விட்டது! அதுதான் விதி! என்று சிலர் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்!

2 COMMENTS

  1. எல்லோர்க்கும் டி.ராஜேந்தரை தெரியும். மணப்பெண்ணை ஹிந்து மதத்திற்கு மாற்றி இருக்கலாம். குஷ்பு மேடம் இந்து மதத்திற்கு மாறவில்லையா ? செல்வாக்கு உள்ள நீங்கள் மாறியது உங்கள் பலவீனம் . பெருந்தன்மை . எனலாம். உங்களுக்கு பின்னடைடைவுதான்.

  2. cinema life is not a disciplined one. All the parents in life will not permit their sons or daughters to go astray. Look at the families of two superstars, some of other women in this line. Do you think they have peace of mind ??

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories